districts

img

வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சிதம்பரம், ஏப். 28- சிதம்பரம் அம்பேத்கர் நகரில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் குடியிருக்கும் பகுதியை நீர்வழி ஆக்கிரமிப்பு எனக் கூறி அதிகாரிகள் வியாழனன்று (ஏப். 28) இடிக்க வந்தனர். இதையடுத்து சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் தலைமையில் மாற்று இடம் வழங்கிய பிறகு இடிக்க வேண்டும் என்றும், வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் பொக்ளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கிடையேயும், காவல்துறை பாதுகாப்புடன் குடியிருப்புகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கழிவறைவும் இடிக்கப்பட்டது. பின்னர் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூடுவெளிச்சாவடி கிராமத்தில் மாற்று இடம் வழங்கப்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;