districts

img

பொன்னேரியில் பொதுமக்கள் கூழ்வார்த்து வரவேற்பு

திருவள்ளூர் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்து சிபிஎம் சார்பில் வாக்குகளை சேகரிக்க இரண்டு சக்கர வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். பொன்னேரி அருகில் உள்ள அகரம் கிராமத்திற்கு சென்ற போது,  கிராம வாசிகள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதாககூறி, பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு கூழ் ஊற்றி ஆதரவு அளித்தனர்.இதில் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.