சென்னை மூலகொத்தளம் அருகேயுள்ள வால்டாக்ஸ்சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கீழே சரிந்துவிழுந்த பேருந்து நிழற்குடையை இன்னும் நிலைநிறுத்தப்படாமல் உள்ளது. பத்மநாபா திரையரங்கம் எதிரில் உள்ள இந்த சாய்ந்த நிழற்குடையால் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.