districts

பொது பங்கு வெளியீடு  

சென்னை, நவ.7- சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபைவ் ஸ்டார்பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது முதல் பொது பங்கு வெளியீட்டை துவங்கவுள்ளது. ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பை ரூ. 450 முதல் ரூ. 474 வரை  நிர்ணயித்துள்ளது.  புதன்கிழமை (நவ.9) தொடங்கிய பங்கு விற்பனை வெள்ளிக்கிழமை (நவ.11) நிறைவடைகிறது.  முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 31 ஈக்விட்டி பங்குகளை ஏலம் கோரலாம், அதன் பிறகு 31-இன் மடங்கு களாக ஈக்விட்டி பங்குகளை கோரலாம்.  ஃபைவ் ஸ்டார்  பிஸ்னஸ் ஃபைனான்ஸ் நிறுவனம், குறு-தொழில்முனை வோர் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு பாதுகாக்கப் பட்ட வர்த்தகக் கடன்களை வழங்குகிறது. தென்னிந்தியாவில் தனக்கென ஒரு வலுவான இருப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், கடன் பெறு வோரின் சொத்துக்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட முறை யிலேயே அனைத்து கடன்களையும் வழங்கி வருகிறது.