districts

மனநல பிணியாளர்கள் வரைவு அறிக்கை தமிழில் வெளியிட உறுதி: சிபிஎம் வரவேற்பு

சென்னை, ஏப். 28 - “வீடுகளற்று வீதியிலிருக் கும் மனநல பிணியாளர்கள்” குறித்த வரைவு அறிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோரிக் கையை ஏற்று அரசு தமிழில்  வெளியிட உறுதியளித்துள்ள தற்கு மார்க்சிஸ்ட்  கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: வரைவு கொள்கை அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. 7 தினங்களுக்குள் கருத்து  தெரிவிக்கவும் கோரப்பட்டி ருந்தது. வரைவு அறிக் கையை தமிழில் வெளியிடு வதோடு, கருத்து தெரிவிப் பதற்கு போதிய கால அவகா சம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி கோரியது. இதனை ஏற்று தமிழில்  அறிக்கையை வெளியிடப் படும் என்று தேசிய நல குழுமத்தின் இணையத்தில் அரசு தெரிவித்துள்ளதோடு, கருத்து தெரிவிப்பதற்கான காலத்தை மே 18 வரை  நீட்டித்துள்ளது. இதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வரவேற்கி றது. அதே நேரத்தில் தமிழில்  அறிக்கையை வெளியிட்ட தில் இருந்து கருத்து தெரிவிப் பதற்கு ஒரு மாத காலம் அவகாசத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.