சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் 165வது பிறந்த தினமான ஞாயிறன்று (பிப்.18) திருவல்லிக்கேணியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சங்க பொதுச் செயலாளர் எம்.பழனி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தரம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.முருகேஷ் , ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர்.கபாலி உள்ளிட்டோர் பேசினர்.