பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ.5,000 வீதம் 32 முஸ்லிம் மகளிருக்கு ரூ.1.60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார். மாவட்ட நல அலுவலர் பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, சங்கத்தின் இணைச் செயலாளர் பர்வீன், செயலாளர் செயத்நிசார் அகமது, ஆம்பூர் முஸ்லீம் கல்வி சங்கத்தின் உதவி தலைவர் பிர்தோஸ் அஹ்மத் ஆகியோர் உடனிருந்தனர்.