விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரியும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கே.லெனின் சோழன் தலைமையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஆர்பாட்டம் நடைபெற்றது, இதில் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், செயலாளர் சே.அறிவழகன், நிர்வாகிகள் ஜெ.சசிக்குமார், ஏ.கலைமணி, ஏ.அபுபக்கர் சித்திக், ஜெ.தினேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.