விழுப்புரம் மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மண்டல செயலாளர் கே.அம்பிகாபதி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.பழனிவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, நிர்வாகிகள் பி.சிவசந்திரன், எஸ்.ரவிசந்திரன், வி.கே.ஏழுமலை, டி.ஜீவா, எம்.புருசோத்மன், என்.தேசிங்கு, ஆர்.சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.