கள்ளக்குறிச்சி, பிப்.27 - திருநாவலூர் கூட்டுறவு வங்கியில் திருடுபோன விவசாயிகளின் நகை களுக்கு இழப்பீடு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டை நாம போராட்டம் செவ்வாயன்று (பிப்.27) நடைபெற்றது. திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு 493 விவ சாயிகள் அடமானம் வைத்தி ருந்த 1790 சவரன் நகை திருடு போனது, இதனை அடுத்து வங்கி முன்பு காத்திருப்பு போராட்டம், பூட்டு போடும் போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கந்தர்வ கோட்டை சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தலைமையில் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது கூட்டுறவுத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறை வருவாய் துறை அதிகாரி கள் களவு போன நகை களை தற்போதைய சந்தை மதிப்பில் மூன்று மாதங்க ளுக்குள் திரும்ப ஒப் படைக்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர், ஆனால் இதுவரை நகை களை இழந்த விவசாயிக ளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயி களுடன் திருடுபோன நகை களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி பட்டை நாமத்துடன் ஊர்வலம் நடத்தினர். அவர்களை உளுந்தூர்பேட்டை மற்றும் திருநாவலூர் காவல்துறை உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக் காரர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டக் காரர்கள் அதே இடத்தில் அமர்ந்து திருநாவலூர் கூட்டுறவு வங்கி கூட்டு றவுத் துறையை கண்டித்து முழக்கமிட்டனர். பின்னர் காவல்துறையினர் அனை வரையும் கைது செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம்.வி. ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழு மலை, ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெய குமார்,ஒன்றிய செயலாளர் மேற்கு டி.எஸ்.மோகன், டி.வெங்கடேசன், பன்னீர்செல்வம், வெங்க டேசன், பெரியநாயகம், செந்தில், வேல்முருகன், கஸ்தூரி, தெய்வானை, பரிமளா, ஜெயக்குமார், திரு மலை, வாசன், முத்துப் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.