districts

img

வைப்பு நிதியை செலுத்தாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

சென்னை, மே 23 -

    வருங்கால வைப்பு நிதியை, பிஎப் கணக்கில் செலுத்தாத தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செவ்வாயன்று (மே 23) மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் இருந்து 2011-23 ஆண்டுகளில் வருங்கால வைப்பு நிதியாக சுமார் 21 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

   அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி கணக்கில் மாநகராட்சி செலுத்தவில்லை. இந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

   அதன்பிறகும் மாநகராட்சி நிர்வாகம் பணத்தை செலுத்தவில்லை. இதனை யடுத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இதன்பிறகு மாநகராட்சி ரூ3 கோடி மட்டும் செலுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மாநகராட்சி பிடித்தம் செய்த ரூ21 கோடியும் வருங்கால வைப்பு நிதியில் செலுத்த வேண்டும். தூய்மை பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, நேரடியாக தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும்.

    தொகுப்பூதிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாநகராட்சி நல அலுவலர் அருளானந்தம், மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோரை அழைத்து பேசினார். அப்போது, தீர்ப்பாயத்தில் உள்ள வழக்கு ஜூன் 19ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள்ள ஆவணங்களை சரிபார்த்து பணத்தை செலுத்த நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்துள்ளார்.

   கட்சியின் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில்குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, தாம்பரம் மாநகராட்சி தொழி லாளர் சங்க (சிஐடியு) தலைவர் ராஜன் மணி, பொதுச்செயலாளர் கே.சி.முருகன், சிஐடியு தலைவர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஜீவா உள்ளிட்டோர் பேசினர்.