districts

img

ரூ.1,781 கோடி சொத்துவரி வசூல்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, மார்ச் 2- சென்னை மாநகராட்சியில் 2024 -25-ம் நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் ரூ.1,781.79 கோடி சொத்துவரி வசூலாகி யுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.364.23 கோடி அதிகமாகும். சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி பிரதான வருவாயாக உள்ளது. சென்னை யில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரி மையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக் கிறது. சொத்துவரி மூலம் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளான சுகாதாரம், திட க்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், நோய் தடுப்பு, சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரையிலும், 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை  அக்டோபர் 1-ந் தேதி முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்து வரியில் 5 விழுக்காடு, அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்க ப்படும். அரையாண்டுக்கு பிறகு செலுத்தப் படும் சொத்து வரிக்கு ஒவ்வொரு மாதத்துக் கும் ஒரு விழுக்காடு தனிவட்டி அபராதமாக விதிக்கப்படும். அதன்படி, கடந்த 2023- 24-ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி ரூ.1,755 கோடி சொத்து வரி வசூல் செய்தது. இந்த நிலையில், 2024- 25-ம் நிதி யாண்டில் அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 1  முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி  வரை (11 மாதங்கள்) சென்னை மாநக ராட்சி ரூ.1,781.79 கோடி சொத்துவரி வசூ லித்துள்ளது. கடந்த 2023- 24-ம் நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை) ரூ.1,417.56 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இந்த நிதியாண்டில் ரூ.364. 23 கோடி அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சொத்துவரியை பொறுத்தமட்டில் 2023- 24-ம் நிதியாண்டில் மொத்தமாக ரூ.1,755  கோடி வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி யாண்டில் அதைவிட கூடுதலாகவே மாநக ராட்சிக்கு சொத்துவரி மூலம் வருவாய் கிடை த்துள்ளது. 2024- 25-ம் நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, இந்த நிதியாண்டில் மொத்தமாக ரூ.1,915 கோடி வரையில் சொத்துவரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 2024- 25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.879.86 கோடியும், 2-வது அரையாண்டில் (5 மாதத்தில்) ரூ.901.93 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ந் தேதியுடன் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் நிறைவு செய்யப்படும். மொத்த வரி வருவாய் கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது 15 விழுக்காடு அதிகம் வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.