districts

வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குநர் ஆய்வு

கள்ளக்குறிச்சி,மே 29-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது.

     மேலும் இந்த திட்டத்தில் 15-வது நிதிக்குழு மல்லாபுரம் பள்ளி கட்டிடம் தடுப்பு சுவர், வடிக்கால் வாய்க்கால் சிமெண்ட் சாலைகள், மயானத்தில் சுற்றுசுவர் சிறு பாலம் பணிகள், ஓடையில் 8 தடுப்பணை பணிகள், குளம் தானியக்களம், நடுநிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெறும் சமையல் கூடம் பழுது நீக்கம் செய்தல் போன்ற பணிகளை திட்ட இயக்குநர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.