districts

img

ஊர்வலத்திற்கு தடை, பேச்சுவார்த்தை நடத்தவும் தொழிற்சாலை நிர்வாகம் மறுப்பு

திருவள்ளூர், ஜன. 27- தொழிற்சங்கத்துடன் பேசி பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண,  சூப்பர் பில் நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் வெள்ளி யன்று (ஜன. 26), தொழிற் சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி அருகில் உள்ள இருளிப்பட்டில்   சூப்பர்பில் என்ற தனியார் நிறுவனம் கடந்த 35 ஆண்டு களாக இயங்கி  வருகிறது. இதில் உள்ள இரண்டு யூனிட்களில் 300 க்கும் மேற்பட்ட  நிரந்தர தொழிலா ளர்கள் கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக பணி யாற்றி வருகின்றனர். இதில் மீன்பிடி வலைகளுக்கான நைலான் கயிறுகளை தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில்  பணியாற்றும் தொழிலாளர்களின்  கோரிக் கைகளை நீண்ட காலமாக  நிறைவேற்றதாத நிலை யில்,  சிஐடியு  சங்கத்தில் தொழிலாளர்கள் இணைந்த னர். அப்போது நிர்வாகம் சங்கத்தை செயல்பட விடாமல் செய்தது. சிஐடியு சங்கத்தை  நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வில்லை. சங்கத்தில் சேர்ந் தார்கள் என்ற ஒரே காரணத் திற்காக தொழிலாளரகளை பழி வாங்கும் நோக்கத் தோடு,   உடனடியாக கடந்த  ஆகஸ்ட் 15 அன்று திடீரென  இரண்டு தொழிலாளர்களை பணியிடை மாற்றம் செய்து, ஒருவரை பாண்டிச் சேரிக்கும், மற்றொருவரை நாகர்கோவிலுக்கும்.  மாற்றம் செய்துள்ளது.சிஐடியு சங்கத்திலிருந்து வெளியே வந்தால் தான்  கோரிக்கைகள் பரிசீலிக்கப் படும் என நிர்வாகம் நிர்பந்தித்து வந்தது. இந்த நிலையில் தங்கள்  கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தும் விதமாக ஜன 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. அப்போது நிர்வாகம் பேச்சு நடத்த முன்வரவில்லை. இந்த சூழலில் ஜன 26 குடியரசு தினத்தன்று தொழி லாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி தொழிற் சாலை அமைந்துள்ள இருளிப்பட்டியிலிருந்து ஊர்வலமாக சென்று ஜனப் பன்சத்திரம் கூட்டுச்சாலை ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதி கேட்டிருந்தனர். சோழ வரம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் ஊர்வ லம் செல்ல அனுமதியில்லை தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சூழலில் தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றதாத தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. போராடும் உரிமையையும் காவல்துறை நசுக்குகிறது. சங்கம் வைத்தால் நிர்வா கம் ஏற்க மறுக்கிறது. இப்படியே போனால்  தொழி லாளி எப்படி வாழ்வது என  ஆவேசமாக முழக்கமிட்ட னர். இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என தொழிலாளர்களும், தொழிற்சங்க தலை வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில்  சூப்பர்பில் தொழிற்சாலை சிஐடியு கிளைத் தலைவர் வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில்  சிஐடியு  மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் என்.நித்தி யாநந்தம், மாவட்ட துணை நிர்வாகிகள் எஸ்.எம்.அனீப்,  இ.ஜெயவேல், எம்.சந்திர சேகரன்,  அர்ஜுனன்,வேலு, கோபி, கண்ணபிரான் விவசாய தொழிலாளர் பகுதி  செயலாளர் எஸ்.இ.சேகர் ஆகியோர் பேசினர்.