சிதம்பரம், அக்.11- கர்நாடக அரசு தமிழ கத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் புதன்கிழமை கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடை பெற்றது. காவிரி படுகை பாது காப்பு கூட்டியக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதி யில் காய்கறி மார்க்கெட், நகைக்கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட சுமார் 50 விழுக்காடு கடைகள் அடைக்கப்படிருந்தன. மறியல் போராட்டத்தில் காவிரி படுகை கூட்டியக்க விவசாயிகள் அமைப்புப் பிரதிநிதிகள், விசிக மாவட்ட செயலாளர் அரங்க.தமிழ்ஒளி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத்துணைத் தலைவர் மூசா, மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, விச மாவட்டநிர்வாகிகள் சரவணன், ராமச்சந்திரன், கற்பனைசெல்வன், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.வாஞ்சிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) வி.எம்.சேகர், தமிமுன் அன்சாரி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க தலைவர் கண்ணன், துணை செயலாளர் காஜா மொய்தீன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அன்பு சித்தார்த்தன் உள்ளிட்ட100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம்வரை ஊர்வல மாக முழக்கங்கள் எழுப்பிய வாறு சென்றனர். அப்போது இவர்களைக் காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். இதேபோல் காட்டு மன்னார்குடி, குமராட்சி, சேத்தியாத்தோப்பு பகுதியில் முழு கடைய டைப்பு நடந்தது. காட்டு மன்னார்கோவிலில் பகுதி யில் நடந்த மறியல் போராட்டத்திற்கு விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கி னார். பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், தமிழ்நாடு பனை நல வாரிய உறுப்பி னர் பசுமைவளவன், வீரா ணம் ஏரி ராதாமதகு பாசன விவாசயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகி அனைத்துக் கட்சி நிர்வாகி கள், விவசாய சங்க பிரதி நிதிகள் ஊர்வலமாக நகரத்தின் முக்கிய வீதி கள் வழியாக வந்து தபால் அலுவலகத்தின் நுழை வாயில் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர்.