கடலூர், மார்ச் 22- கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக் கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத் தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வாக்குப்பதிவு எந்திரங் களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி களுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. இதையொட்டி ஆட்சியர் அருண் தம்புராஜ் தலை மையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அலுவல கத்திற்கு வந்திருந்தனர். இதற்கிடையே வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங் கின் கதவை ஆட்சியர், அரசி யல் கட்சியினர் முன்னி லையில் ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் களால் திறக்க முடிய வில்லை. இதனால் ஆட்சி யர் மற்றும் அரசு அலுவலர் களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேர மாக வாக்கு பதிவு எந்திரங் கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பூட்டு பழுதுபார்க்கும் ஊழியரை அழைத்து வந்து கிடங்கின் கதவை திறந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக திறக்கப்பட்டு பின்னர் வாக்கு பெட்டி எந்தி ரங்கள் அந்தந்த தொகு திக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகி றது.