districts

img

வாய்க்காலில் கவிழ்ந்த தனியார் பள்ளி வேன்  

மயிலாடுதுறை, மார்ச் 1- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் இயங்கிவரும் விவேகானந்தா பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக வேனில் வந்த மாணவர்கள் அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.   ஆக்கூர் பாரதியார் வீதியில் விவேகானந்தா தனியார்  பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலை யில், புதனன்று பள்ளி குழந்தைகளை மருதம்பள்ளம் கிரா மத்திலிருந்து அழைத்துக்கொண்டு இரு ஆசிரியர்களு டன் வந்த பள்ளி வேன் நத்தம் கிடங்கல் அருகில் ஆக்கூர்  வடிகால் வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது.  பள்ளி மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு பொது மக்கள் அவர்களை மீட்டு ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிறு காயங்களு டன் தப்பிய ஆசிரியர் கிருஷ்ணவேணி மேல் சிகிச்சைக் காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  விபத்து குறித்து பொறையார் காவல் அதிகாரிகள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து  வேன் டிரைவர் சாகுலிடம் விசாரணை செய்து வருகின்ற னர்.