சிறுமிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது
செங்கல்பட்டு. மார்ச் 5- எல்கேஜி படிக்கும் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வல்லாஞ்சேரி பகுதியில் தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் ராசைய்யா (29), இசைப்பயிற்சி ஆசிரியர் காயேஸ்குமார்(29) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு ராசைய்யா, காயேஸ்குமார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் ஆசிரியர்கள் தவறாக நடந்ததை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வாளர் மாலினி தலைமையிலான போலீசார் பள்ளி ஆசிரியர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிறப்பு சான்றிதழில், பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு
கள்ளக்குறிச்சி. மார்ச் 5- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் குழந்தை பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான சான்று,பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற சட்டம் வழிவகை செய்கிறது பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகும் குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டு இருப்பின் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து கட்டணம் இன்றி பதிவு செய்யலாம், 12 மாதத்திற்கு பின் 15 வருடங்க ளுக்கு ரூ200 செலுத்தி பதிவு செய்ய லாம் 15 ஆண்டுகளுக்கு பதிவு செய்ய இயலாது, 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கு 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறகு பதிவுக்கு குழந்தை பெயர் வைத்து பிறப்புச் சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது பிறப்பு பதிவினை நகராட்சி,மாநகராட்சி,வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலகங்களில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வேலூருக்கு சட்டப்பேரவை உறுதிமொழி குழு இன்று வருகை
வேலூர். மார்ச் 5- வேலூர் மாவட்டத்திற்கு செவ்வாயன்று வருகை தரும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவிடம் பொதுமக்கள் தங்கள் பொதுவான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரி வித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு, பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.வேல்முருகன் தலை மையிலான 11 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழுவினர் புதனன்று வரு கின்றனர். இந்த குழு மாவட்ட முழுவதும் ஆய்வு நடத்த உள்ளது. இதையொட்டி ஏற்கெனவே நிலுவையில் இருந்த உறுதி மொழிகள், சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உறுதிமொழிகளின் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த குழு காலை முதல் பிற்பகல் வரை உறுதிமொழி குழுவுக்கு வந்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி கள ஆய்வு செய்து, பிற்பகலில் ஒவ்வொரு உறுதிமொழி மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விரிவாக ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேலூர் மாவட்ட பொதுமக்கள் தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ப.வேல்முருகனிடம் மனுக்களை வழங்கலாம் என்று தெரி வித்துள்ளார்.
கண் புரை நோய் கண்டறியும் விளக்கக் கூட்டம்
கடலூர்,மார்ச் 5- தமிழ்நாடு மாநில பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்புரை நோயை கண்டறியும் கலந்துரையாடல் விளக்க கூட்டம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார். துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் சந்திரகுமார் கண்புரை நோய் கண்ட றிதல் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் கடலூர் வட்டார ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் கேசவன் நன்றி கூறினார். அடிக்கல் நாட்டு விழா கடலூர், மார்ச் 5- கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் 24 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 155 காவலர்கள் குடியிருப்பு கட்ட ரூ.54.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
உதவி போஸ்ட் மாஸ்டர் தற்கொலை
கடலூர், மார்ச்.5- கடலூர் தலைமை தபால் நிலையத்தில் உதவி போஸ்ட் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலை யத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கண்ணன் (55) என்பவர் உதவி போஸ்ட் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திங்களன்று இரவு கண்ணன் தபால் நிலையத்திலேயே தங்கி விட்ட தாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் எழுந்த அவர் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவ ருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில தெரிய வந்துள்ளது.