districts

img

பிரதமர் கிசான் நிதி: விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை

விழுப்புரம், டிச.13- கண்டாச்சிபுரம் அருகே வீரசோழ புரத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட  அனைவருக்கும் பிரதமரின் கிசான் உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வேளாண் அலுவலகத்தில் மனு அளித்த னர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட வீரசோழபுரம். இங்கு, பாரத பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ. 6000 பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலர் தகுதி இருந்தும் இந்த உதவித்தொகை கிடைக்காமல் உள்ளனர். பாதிக்கப்பட்ட வர்கள் புதன்கிழமை (டிச.13) தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்டப் பொருளாளர்  பி.சிவராமன் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.