செங்கல்பட்டு,ஜன.27- தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங் களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 243 ஐ உடனடியாக ரத்து செய்யவேண்டும், 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வ ஆணை களை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் இந்தபோராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சனிகிழமையன்று (ஜன. 27) நடைபெற்ற போராட் டத்திற்கு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வின் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சீனுவாசன் தலைமை யேற்றார். போராட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் கோ.க.முருகன் பேசினார். போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலை வர் மூ.மணிமேகலை பேசினார். இப்போராட் டத்தில் மாவட்டம் முழுவ தும் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.