தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பழைய நடைமுறைப்படி விருப்பப்படி வருமான வரி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.முருகதாஸ், நிர்வாகிகள் ரா. வெங்கடாசலம், கா. அனார்கலி, சே.குருராஜன், கோ.முரளி மாநில செயலாளர் ஜோ. கிரிஸ்டோபர், மாவட்ட செயலாளர் சாந்தகுமார், அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜி. வைத்திலிங்கம், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல். அரிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாவட்டப் பொருளாளர் மைதிலி நன்றி கூறினார்.