சென்னை,ஆக.21-
வடமாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் பருப்பு வகைகள் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால் பருப்பு வகைகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எனவே வரும் நாட்களில் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பண வீக்கத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.