அச்சுப் பொருட்கள் மற்றும் காகிதத்தின் விலை 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தக் கோரியும், 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரையை ரத்து செய்ய வேண்டியும் அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் அருள் சேவியர், பொருளாளர் பிரகாஷ், துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் கனகராஜ், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சந்துரு, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து குடியிருப்போர் நலச்சங்க துணைத் தலைவர் முத்து, ஆனந்தகுமார் (அரசு ஊழியர் சங்கம்), தேன்கனிக்கோட்டை சங்கத்தின் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.