புதுச்சேரி,நவ.30- புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் மய மாக்கும் வகையில் ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். மின்துறை அரசு துறையாகவே நீடிக்க வேண்டும். உயர்த்தப் பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து புதுச்சேரி முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முத்துமாரி யம்மன் கோவில் வீதி, காந்தி வீதி சந்திப்பில் ‘நமது மின்சாரம் நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி செய லாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்தத் தலை வர் முருகன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநிலச் செய லாளர் ஆர். ராஜாங்கம், மின் துறையை தனியார் மய மாக்கும் முடிவை உடன டியாக அரசு கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச் சந்திரன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, பிரபுராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தாட்சாயணி, மணவாளன், மது, ஜோதிபாசு, வீரமணி கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். புதுச்சேரி முழுவதும் மக்களிடம் இருந்து பெறப்படும் லட்சம் கையெழுத்து பிரதிகள் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் ஆகியோரை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வழங்கு கிறார்கள்.