சென்னை. டிச,6- திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புக் குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஞாயிறன்று (டிச.3) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “கடந்த டிச.1 மற்றும் டிச.2 ஆம் தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநக ராட்சியின் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகி யோருக்கு நான் ஏற்கெனவே அறி வுரை வழங்கியிருக்கிறேன். அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்க ப்பட்டுள்ளன. 4,967 இதர பாது காப்பு மையங்களில் பாதிப்புக் குள்ளாகும் பகுதிகளில் இருந்து வரக்கூடிய மக்களை முன்கூட்டியே அழைத்துவந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மற்றும் சென்னை மாவட்டங்க ளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலை யில் உள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொது மக்களுக்கு பொதுவான எச்ச ரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகளின் மூலம், மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து எச்ச ரிக்கை செய்திகள் அனுப்பப்படு கின்றன. அதிலும் மீனவர்க ளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பிவைக்கப் பட்டது. இதன்மூலம் அனைத்து படகுகளுக்கும் ஒரு பாதுகாப் பான ஒரு சூழலை உருவாக்கி யிருக்கிறோம். புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து ஊடகங்கள் மூலம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம். புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டி யவை, செய்யக்கூடாதவை குறித்தும் தொடர்ந்து எச்சரிக்கை வெளியிட்டு வருகிறோம். திரு வள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட் டங்களில் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள். மாநில அவசரகால செயல்பாட்டு மையம், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மின்துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறை களும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பொதுமக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள் ளது. இதனால், மின்கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழு வதற்கான வாய்ப்புகள் இருப்ப தால், பொதுமக்கள் தேவை இல்லா மல் வெளியில் வருவதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேவை ப்பட்டால் மாவட்ட நிர்வாகம், மாநக ராட்சியின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன். அங்க அனைத்து வசதி களும் செய்துதர உத்தரவிடப் பட்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்த வரை, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிர மணியன், சேகர்பாபு ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கின் றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைச்சர் முத்து சாமி, ராணிப்பேட்டை மாவட் டத்தில் அமைச்சர் காந்தி ஆகி யோர் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். அதோடு, ஆங்காங்கே இருக்கும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மக்களுக்கு என்னென்ன பணி களை செய்ய வேண்டுமோ அதை அவர்களும் மேற்கொண்டு வரு கின்றனர். அனைத்துப் பணியாளர்களும் இரவுபகல் பாராமல் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை யிலும் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். அதே போல், வரும் இரண்டு நாட்களுக் கும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்க அர்ப்பணிப்பு உணர்வு டன் பணியாற்ற வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொள்கி றேன். ஊடகங்களும் அரசின் செய ல்பாடுகளுக்கு துணைநிற்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறி னார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்த கேள்விக்கு பதில ளித்த அவர், “நான் அரசியல் பேச விரும்பவில்லை. முதலில் மக்களை பாதுகாக்க வேண்டும். நாங்கள் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எனவே, அவர்கள் கூறும் அரசியல் நையாண்டிக்கும், கேள்விக ளுக்கும் நான் விளக்கம் அளிக்க தயாராக இல்லை” என்றார்.மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்த கேள்விக்கு, அந்தப் பணி களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பணிகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது. புதிதாக மழை நீர் வடிகால்கள் அமைத்திருக் கிறோம். பழைய மழைநீர் வடி கால்களில் ஒருசில இடங்களில் அடைப்பு இருக்கலாம், அவற்றை சரிசெய்யும் பணிகளும் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கிறது” என்றார். புயல் காரணமாக தேங்கும் மழைநீரை அகற்றுவது தொடர்பான கேள்விக்கு பதி லளித்த அவர், “அவசியம் ஏற்படும் பகுதிகள் மட்டுமல்ல, எங்கெல் லாம் மழைநீர் பாதிப்பு ஏற்படு மோ அந்தப் பகுதியில் எல்லாம் மழைநீரை அகற்ற தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது, இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.