தமிழ்நாடு முதலமைச்சரால் தலைமைச் செயலகத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை விருது பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகனை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது புத்தகம் பரிசாக கொடுத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.