புதுச்சேரி, நவ.16- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முது பெரும் தலைவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா மறைவையொட்டி புதுச்சேரியில் வியாழனன்று (நவ.16) அஞ்சலி ஊர்வலம் மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை எதிரில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் முதலமைச்சர் வி.நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் வி.வைத்திலிங்கம், எம்.பி., திமுக மாநில அமைப்பாளர் புதுச்சேரி சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா, எம்.எல்.ஏ., இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் அமுத வன், தலையாரி, மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்கள் முருகன், சுதா சுந்தரராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், ராமச் சந்திரன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சி யப்பன், சீனிவாசன், கலியமூர்த்தி, பிரபு ராஜ், சத்தியா உட்பட திரளானோர் நினைவு அஞ்சலி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் அண்ணா சிலை எதிரே அமைக்கப்பட்டிருந்த தோழர் என்.சங்கரய்யா வின் உருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.