districts

img

மின் கட்டண உயர்வு: தொழில் முனைவோர் போராட்டம்

சென்னை, செப். 25- ‘பீக் அவர்’ மின் கட்டண உயர்வால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சிறு, குறு தொழில் துறையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழு அடைப்பு போராட்டத்தில் திங்களன்று (செப். 25) ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே  தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், விவசாயமும், சிறு, குறு தொழில்கள் இயங்கினால்தான் தேசம் வளர்ச்சி அடையும், வேலை வாய்ப்பு  உருவாகும், பொருளாதாரம் உயரும்” என்றார். நாடு முழுவதும் பதிவு செய்த, பதிவு செய்யாத 15 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். மூலப் பொருட்களின் விலை உயர்வு, இரும்புத்தாது, நிலக்கரி  விலை, மின்சாரக் கட்டணம், போக்கு வரத்துக் கட்டணம், பெட்ரோலியப் பொருட்க ளின் விலை ஆகியவற்றால் சிறு குறு நிறு வனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் பீக்அவர் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வுகளால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. எனவே அரசு உடனடியாக பரிசீலித்து மின் கட்டண உயர்வுகளை திரும்ப  பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.