சென்னை,மார்ச் 24- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 24 வெள்ளி யன்று நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை தனது கந்தர்வக்கோட்டை தொகுதி கோரிக்கைகள் குறித்து பேசியது வருமாறு: கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோயில், கறம்பக் குடி ஒன்றியங்களில் நிலவும் வறுமையை போக்கிட திருச்சி மாவட்டம், பொய்யகுடியிலிருந்து தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் கூனம்பட்டி வழியாக செல்லும் கட்டளை கால்வாயிலிருந்து ஆச்சம்பட்டி டேம் வழி யாக கட்டளைக் கால்வாய் நீர் வழிப்பாதையினை புதிதாக அமைத்துத்தர வேண்டும். கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, கீரனூர் ஆகிய தாலுகா மருத்துவமனைகளுக்கு கூடுதல் வசதிகள், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல மருத்துவமனையில் புதிய கட்டிடம் (சீமாங் சென்டர்) கூடுதல் வசதிகளுடன் கட்டித் தர வேண்டும். கந்தர்வக்கோட்டையில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும், மகளிர் காவல் நிலையமும் கட்டித் தர வேண்டும். கறம்பக்குடி பேரூ ராட்சி பகுதியில் ரிங் ரோடு அமைத்து தர வேண்டும். குன்றாண்டார் கோயிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி அமைத்து தர வேண்டும். கீரனூரில் அரசு போக்குவரத்து பணிமனையும், கந்தர்வக் கோட்டை, கறம்பக்குடி, கீரனூரில் புதிய வழித்தடம் அமைத்துத்தர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, குன்றாண்டார்கோயிலில் புதிய சுற்று லாத்தலம் அமைத்துத்தர வேண்டும். கந்தர்வக் கோட்டை தொகுதி, நார்த்தாமலையில் அரசு கிரானைட், எம்.சான்ட், பி.சான்ட் உற்பத்திக்கான தொழிற் சாலை அமைத்துத்தர வேண்டும்.
தொழிற்பேட்டை அமைத்திடுக
கந்தர்வகோட்டை தொகுதியில் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைத்துத்தர வேண்டும். கந்தர்வகோட்டை யில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்துத் தர வேண்டும். கந்தர்வகோட்டை ஊராட்சி வங்கார ஓடை குளத்தை தூர்வாரி சீரமைத்து பேவர் பிளாக், சாலை, மின் விளக்குகள், பூங்கா அமைத்துத் தர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்திற்கு, புதிதாக இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பணியிடம் ஏற்படுத்தித்தர வேண்டும். கந்தர்வக் கோட்டை தொகுதியில் 300 ஆண்டுகளுக்கும் பழமை யான கோவில்களான ஆதிநாதர் திருக்கோவில், ஆபத் சகாயேஸ்வரர், பக்தலலீதீஸ்வரர், முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களில் குடமுழுக்கு நடத்திட வேண்டும். கறம்பக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங் கலை, முதுகலையில் கூடுதல் பாடப்பிரிவுகளும், தமிழ் முனைவோர் படிப்பும் துவக்கிடவும், ஆசிரியர் பணியி டங்களை நிரப்பிடவும் வேண்டும். கீரனூரில் செயல்படும் கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடமும், நவீன கால்நடை மருந்தகம் அமைத்துத்தர வேண்டும். கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு 600 மீட்டர் இணைப்பு சாலை அமைத்துத் தர வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் ஆலக்குடி சர்க்கரை வாய்க்கால் 3,4,6 ஆம் நம்பர் மண் சாலைகள் மெட்டல் சாலைகளாக தரம் உயர்த்தவும், ஆலக்குடி அய்யனார் கோவிலில் இருந்து கல்விரா யன்பேட்டை வரையுள்ள சர்க்கரை வாய்க்காலின் வடகரை தரம் உயர்த்தி வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தருக
கந்தர்வகோட்டையில் அரசு மருத்துவமனைக்கு 17.07.2008–இல் ஒதுக்கீடு செய்து பதினான்கு ஆண்டு
களாகிவிட்டது, புதிதாக கட்டிட வசதிகள் செய்து சீமாங்
திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.கீரனூர்
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் ஏரியை தூர்வார வேண்டும். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும்.
புதிதாக ஆற்றுப்பாசன வழித்தடம் அமைத்திடுக
காவிரி ஆற்றின் கட்டளை வாய்க்கால் பகுதி திட்டத்தின் கீழ் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி க்குள் உட்பட்ட கண்மாய் மற்றும் குளங்களுக்கு புதி தாக ஆற்றுப்பாசன வழித்தடம் அமைத்துத்தர வேண்டும். கந்தர்வக்கோட்டை தொகுதி, குன்றாண்டார்கோயில் ஒன்றியம் தெம்மாவூர் முதல் இராமுடையான்பட்டி வரை மின்னாத்தூர் வழியாக செல்லும் தார்ச்சாலையை அகலப்படுத்தி, புதிதாக அமைத்துத்தர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் -கறம்பக்குடிஒன்றியம் - ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும்.
வருவாய் கோட்டாட்சியரகம் அமைத்திடுக
புதுக்கோட்டைமாவட்டம் - குன்றாண்டார்கோயில் ஒன்றியம் - குளத்தூர் வட்டம் தெம்மாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும். புதுக்கோட்டைமாவட்டம் - கந்தர்வக்கோட்டை ஒன்றியம் - வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை அரசுமேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும். கறம்பக்குடி தாலுகா - கறம்பக்குடி சரகத்தை கறம்பக்குடி, ரெகுநாதபுரம் என இரண்டு உள்வட்டங்களாக பிரித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தர்வகோட்டை தொகுதி, குன்றாண்டார் கோயில் ஒன்றியம் அண்டக்குளம் கிராமம் கடியாபட்டியில் ஐந்து தலைமுறையாக வசிக்கும் கிராம மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வேண்டும். கந்தர்வக்கோட்டையை மையமாகக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசினார்.