districts

img

கணினியில் பட்டா பதிவேற்றம்

திருவள்ளூர், நவ 7- வேட்டைக்காரன் இன மக்களுக்கு  மாவட்ட நிர்வாகம்  கொடுத்த பட்டாக் களை அடுத்த ஒரு மாதத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் என கிராமத்திற்கே சென்று அம்மக்களிடம் பொன்னேரி வட்டாட்சியர் உறுதி யளித்தால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், சோழ வரம் அருகில் உள்ள ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் உள்ள வேட்டைக்காரன் இன மக்களுக்கு கடந்த 15 ஆண்டு களுக்கு முன்பாக 49 குடும்பங்களுக்கு தோராய பட்டா வழங்கப்பட்டது. அதனை கணினியில் இதுவரை பதி வேற்றம் செய்யவில்லை. இதனால் அரசு பட்டாக்களை வழங்கியும் பயனில்லாமல் உள்ளது. இந்த நிலையில் பட்டாவை கணினி யில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப் 27 அன்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. அப்போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றவில்லை.இதனை தொடர்ந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நவ 6 அன்று  தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக  பொன்னேரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பட்டா கேட்டு தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த நிலையில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன்,  ஆய்வாளர்,  கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்  நவ 5 அன்று   பன்னீர் வாக்கம் கிராமத் திற்கு நேரடியாக சென்று பாதிக்கப் பட்ட மக்களிடம் பேசியுள்ளனர். அடுத்த ஒரு மாத காலத்திற்குள் 49 குடும்பங்களுக்கு கொடுத்த தோராய பட்டாவை கணினியில் ஏற்றி,  கிராம கணக்கில் ஏற்றப்படும். மேலும் விடுபட்ட  17 குடும்பங்களுக்கு புதிதாக  பட்டா தருவதற்கு முயற்சி எடுப்பதாக வும் வாக்குறுதி அளித்தனர். இதனால்  ஆர்ப்பாட்டம் தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை,  மாவட்ட தலைவர் டெல்லி, மாவட்ட செயலாளர் ராஜா, மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு  உறுப்பினர் சரவணன், பன்னீர்வாக்கம் கிளையின் நிர்வாகிகள் வெங்கட்ம்மா, சங்கர், வெங்கட்ராமன் மற்றும் வேட்டைக்காரன் மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.