கள்ளக்குறிச்சி, ஜன.18- தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருநாவலூர் கிழக்கு, மேற்கு, உளுந்தூர்பேட்டை நகரம் மற்றும் வெள்ளி மலை ஆகிய 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாநில பொருளாளர் தோழர் எஸ் பாரதி மாநில இணை செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம். கே.பழனி, மாவட்ட தலை வர் மு.சிவக்குமார்,மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.வெங்கடேசன், துணைச் செயலாளர் எம். உத்திர கொட்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சதீஷ்குமார். உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சிகள் பங்கேற்றனர். உ.செல்லூர் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள உ.செல்லூர் கிராமத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கபடி, ஓட்டப்பந்தயம், சாக்குப்போட்டி, நீளம் தாண்டுதல், கோகோ உள்ளிட்ட ஏராள மான விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றது. பின்னர் நடைபெற்ற கருத்த ரங்கம் பொதுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.செந்தில், ஒன்றியச் செயலாளர் டி.ரகு, தலை வர் ஏ.தங்கமணி, பொருளாளர் எம்,வீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.