districts

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் செல்ல 2 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை,ஜன.9- பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) வருவதால் பெரும் பாலானவர்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பயணத்தை தொடங்கு வார்கள்.  அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து  6 சிறப்பு பேருந்துநிலை யங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் அரசு பேருந்துகளில் ஒரு  மாதத்திற்கு முன்பே முன் பதிவு செய்யத் தொடங்கி விட்டனர். பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட் களே இருப்பதால் அரசு  விரைவு பேருந்து, ரயில்கள்  அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள்  அனைத்திலும் இருக்கை கள் நிரம்பியதால் பிற போக்குவரத்துக் கழக பேருந்துகள் முன்பதிவில் இணைக்கப்பட்டு முன் பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம், சேலம், மதுரை, கும்ப கோணம், கோவை, திரு நெல்வேலி அரசு போக்கு வரத்து கழக பேருந்துகளுக் கும் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளன. 13-ந்தேதி வெளியூர் செல்ல அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிரம்பி வருகின்றன. 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார்  2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக அதிகாரி கள் தெரிவிக்கின்றனர்.