பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு கள்ளக்குறிச்சி நிறைமதி ஊராட்சியில் உள்ள ரேசன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.