எழும்பூர் பகுதி, கே.பி. பார்க் குடியிருப்போர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து பொங்கல் விழா போட்டிகளை நடத்தின. இந்நிகழ்வில் சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கே.பி. பார்க் அலுவலர் மல்லிகா, பி4 காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.