திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, நெல்லிக்குப்பம் புகழேந்தி, திமுக பகுதிச் செயலாளர் இரா.சுரேஷ், சிபிஎம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா மற்றும் செந்தில்குமார் (காங்கிரஸ்), சாமுவேல் எபிநேசர் (விசிக), ராஜ்குமார் (சிபிஐ) உள்ளிட்டோர் பேசினர்.