திருவண்ணாமலை, மே 3- சாலை விபத்துக்களை குறைக்கவும், குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முயற்சியால் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து 10 காவல் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த கேமராக்கள் தேவைக்கேற்றார்போல் 360 டிகிரி சுழலும். மேலும் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையுடன் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேர பதிவுகளையும் தெளிவாகக் காண முடியும். மேலும் இதன் பதிவுகளை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.