districts

img

பெண்களை அலைக்கழிக்கும் காவல்துறை: சிபிஎம் ஆவேசம்!

விழுப்புரம், ஜூலை 27- குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அலைக்கழிக்கும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர், உதவி ஆய்வாளர் ஆகியோரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டக்குழு சார்பில் புத னன்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.தமிழ்ச்செல்வி ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாதர் சங்கத்தின் வானூர் வட்டத் தலைவர் எம்.யுகந்தி, கோட்டக்குப்பம் நகராட்சி கவுன்சிலர் பர்கத் சுல்தானா, வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பால முருகன், ஆர்.சேகர், ஜெ.முகமது அனல்,  கே.மாயவன், வி.சுந்தரமூர்த்தி. கே.நட ராஜன். என்.அசுவத்தாமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.