குடியாத்தம், நவ.7- நவம்பர் புரட்சி தினத்தை யொட்டி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செஞ்சட்டை ஊர்வலம் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த அக்டோபர் 30 அன்று அனுமதி கேட்டு குடி யாத்தம் நகர காவல் நிலை யத்தில் மனு அளிக்கப் பட்டது.மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், ஊர்வ லத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கெள்ளப்பட்டது. திட்ட மிட்டப்படி குடியாத்தம் நகர செயலாளர் காத்தவ ராயன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், பேர்ணாம் பட்டு தாலுகா செயலாளர் சரவணன் ஆகியோர் நவ. 7 அன்று பழைய பேருந்து நிலையத்தில் திரண்டனர். அங்கு வந்த காவல் துறையினர் அனுமதி மறுப்ப தாக தெரிவித்தனர். அப்போது, ஏற்கெனவே கடி தத்தில் கூறிய குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் தொடங்கி அண்ணா சிலை, நேதாஜி சவுக், கோபாலபுரம், பூக்கடை பஜார், காட்பாடி ரோடு புதிய பேருந்து நிலை யம் வழியாக ஊர்வ லம் செல்லாமல், மாற்றுப்பாதையில் குறு கிய தூரம் செல்வதாக கூறி யும் காவல்துறையினர் ஏற்க வில்லை. இதையடுத்து, காவல் துறையின் தடைகளை மீறி ஊர்வலம் புறப்பட்டது. அப்போது காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் தடுத்து நிறுத்த முயன்றனர். காவல்துறை வாகனத்தை நடுவில் நிறுத்தி தடுக்க முயற்சித்தனர். இந்த நிகழ்வின் போது பெண்கள், வயதான வர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளை அராஜகமாக கையாண்ட காவலர்கள் வயதானவரை தாக்கினர். இதற்கிடையில் நடை பெற்ற ஊர்வலத்தை குடி யாத்தம் சந்தை பகுதியில் நிறைவு செய்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி யில் உரையாற்றிய கட்சி யின் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, காவல்துறையின் அராஜக செயலைக் கண்டித்தார்.