கிருஷ்ணகிரி,ஜன.14- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப் பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கராஜ் தலைமையில் ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் காவல்துறையினரின் பொங்கல் விழா நடைபெற்றது.கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இருபாலாருக்கு இடையே நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பெண் காவலர்கள் ஊழியர்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.பாரம்பரிய கலையம் உடைத்தல் போட்டியிலும் பெண் காவலர்கள்,அதிகாரிகள் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இது நாள் வரை இல்லாத நிலையில் முதல் முறையாக ஓசூரில் விழா முடியும் வரை சீருடை இல்லாமல் வண்ண வண்ண உடைகளில் குடும்பத்துடன் சாதாரண மக்களாய் பொங்கல் விழா கொண்டாடியதில் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.