காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (ஏப்.10) புதனன்று மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமையில் காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம், விப்பேடு, கூத்திரமேடு, கீழ்கதிர்பூர், மேல்கதிபூர், பெரும்பாக்கம், முசரவாக்கம் திருப்புட்குழி பால்செட்டி, தாமல், கோவிந்தவாடி, புதுப்பாக்கம், கீழ்அம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே.நேரு, என்.நந்த கோபால், எஸ்.சீனுவாசன், கே.செல்வம், ஜி.வந்தா, வெங்கடேசன், ராமு ஆகியோர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.