districts

img

வீனஸ் பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம், ஜூன் 16- சிதம்பரம் வீனஸ்  மேல்நிலைப் பள்ளியில், முதியோர் கொடுஞ் செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார்.  பள்ளியின் முதல்வர் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை  மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். அப்போது பள்ளியின் தாளாளர் வினஸ்குமார் மாணவர்களிடையே பேசுகையில்,“ முதியோர்கள் பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும் என்றும் அவர்களிடம் அன்பு காட்டி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் அறிவழகன் நன்றி கூறினார்.