districts

சென்னை முக்கிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தாமதம்

சென்னை,மே 8- சென்னையில் சில இடங் களில் முன்பதிவு செய்த வர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோ கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். திருவான்மியூர் பகுதி யில் வழக்கமாக முன்பதிவு செய்த 3 நாட்களுக்குள் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் அங்கு முன்பதிவு செய்த 8 நாட்களுக்கு பிறகே விநியோகம்  செய் யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன ஆலையில் ஒரு சிலிண்டரின்  அடிப்பகுதி வெடித்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே  பழைய மற்றும் துருப் பிடித்த சிலிண்டர்கள் அகற்ற நிறுவனம் முடிவு  செய்தது. பழைய சிலிண்டர் களை அகற்றிய நிலையில் அதற்கு பதிலாக புதிய  சிலிண்டர்கள் போதுமான அளவில் வரவில்லை. இதன்  காரணமாகவே தட்டுப்பாடு என அதிகாரிகள் கூறினர். 

கோயம்பேடு சந்தையில்  பிரமாண்ட பூங்கா அமைக்க திட்டம்

அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையும் அமைகிறது

போரூர்,மே 8-  சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21 ஏக்கரில் கடந்த1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தை வளாகத்தை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ. 20 கோடி  நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி கோயம்பேடு சந்தை வளாகத்தில் அடிப்படை  பிரச்சினைகளான மழைநீர் வடிகால், சாலைகள் அமைப்பது, கழிவறை, மின் விளக்கு, கணினி நுழைவு வாயில், கடை களுக்கு பின்புறம் உள்ள சர்வீஸ் தெருவில்  கல் பதிப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், செயற்கை நீருற்று உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்தை மேலும் அழகுபடுத் திடும் வகையில் பூ மார்க்கெட் வளாகத்தில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமான பூங்கா ஒன்றை  அமைத்திட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம்  கோயம்பேடு மற்றும் அதன் சுற்று வட்டார  பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறு வார்கள். நடைபயிற்சி பாதை, ஜாக்கிங் பாதை, குழந்தைகள் விளையாட இடம்,  மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், செடிகள், மரங்கள், செயற்கை தோட்டங்கள்  என அனைத்து வசதிகளுடன் இந்த பூங்காவை நவீனமான முறையில் அமைக்க  சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு அதற் கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்ற னர். இதேபோல் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்றை அமைக்கப்படஉள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

கஞ்சா வியாபாரிகள் கைது

சென்னை , மே 8- தமிழகத்தில் கடந்த 6 நாட்களில்  659 கஞ்சா வியா பாரிகள் கைது செய்யப்பட் டுள்ளனர். கஞ்சா வியாபாரிகளிட மிருந்து 728 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளின் 41 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர். இதில்  5 பெண் வியாபாரிகள் அடங்குவர்.இந்த சோதனை ளில் தாம்பரத்தில் 15 டன் குட்கா பிடிப்பட்டது. ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ தொடரும் என்றும், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிப்ப வர்களுக்கு தக்க பண வெகுமதி வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. சைலேந் திரபாபு தெரிவித்துள்ளார்.

ரவுடி கொலை

 வேளச்சேரி,மே 8-  சோழிங்கநல்லூர் அருகே உள்ள காரப்பாக்கம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர். நித்யா என்கிற பல்லு நித்யா (வயது34). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்கு கள் உள்ளன. இந்த நிலையில் திங்களன்று காலை நித்யா அதே பகுதியில் கொலை செய்யப்பட்டார்.கிரிக்கெட்  மட்டையால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது  தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்ணகி நகர் காவல்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை - மாமல்லபுரம் இடையே மீண்டும் ஏ.சி. பேருந்துகள் இயக்கம்

மாமல்லபுரம்,மே 8-  மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை பார்த்து ரசிக்க தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா  பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி. பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து  வந்தனர். ஏற்கனவே சென்னை பிராட்வே, கோயம்பேடு, தி.நகர், அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடைகால விடுமுறை  நாட்கள் மற்றும் வார இறுதி, விஷேச நாட்களில் மாநகர  ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் போதிய வருவாய் இல்லாததால் அவை நிறுத்தப்பட்டது. இந்த  நிலையில் தற்போது மீண்டும் அடையாறில் இருந்து மாமல்ல புரத்திற்கு மாநகர ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட்டது. சனி  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்  இப்பேருந்துகளை  இயக்க, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

வியாசர்பாடி மேம்பாலத்தை  அழகுபடுத்தும் பணி துவக்கம்

சென்னை,மே 8-  வியாசர்பாடி மேம்பால தூண்களில் அழகிய வண்ண ஓவியம் வரையும் பணிகள் நடந்து வருகிறது.  சென்னை வியாசர்பாடி மேம்பாலம் இரட்டை கிளை  வடிவத்தில் பிரம்மாண்ட மான வகையில் கட்டப்பட்ட தாகும். இந்த பாலம் சத்தியமூர்த்தி நகருக்கும்  எருக்கஞ்சேரி சாலைக்கும்  செல்லும் வகையில் அமைந்துள்ளது. இப்பாலம் பொது மக்களின் பயன் பாட்டுக்கு விடப்பட்டு 5  ஆண்டுகளுக்கு மேல் ஆகி றது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும் மேம் பாலத்தின் அடியில் போலீசார் பறிமுதல் செய்த இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.  தற்போது மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள  ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு மேம்பாலம் அழகு படுத்தும் பணிகள் தீவிர மாக நடந்து வருகிறது. மேம்பாலத்தின் தூண்க ளுக்கு இடையே உள்ள பகுதிகளில் மண் நிரப்பப் பட்டு அழகிய பூஞ்செடிக ளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பால தூண்களில் அழகிய வண்ண ஓவியங் கள், பழங்கால சிற்ப ஓவியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சத்தியமூர்த்தி நகருக்குச் செல்லும் பாலத்தின் கீழ் பகுதியில் சிறுவர்கள் விளையாட இடம் ஒதுக்கப்பட உள்ளது.  வியாசர்பாடி மேம்பாலத் தின் அடியில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டு தூய்மையாக பராமரிக்கப் படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:  12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.86 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, மே 8 - 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி  மாணவர்கள் 86.86 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள் ளனர். இது கடந்த ஆண்டை  விட 0.39 விழுக்காடு அதிகமா கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 626 மாணவர், 3 ஆயிரத்து 273  மாணவியர் என 5 ஆயிரத்து  899 பேர் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 2 ஆயிரத்து 129 பேரும் (81.07 விழுக்காடு), மாணவிகள் 2  ஆயிரத்து 995 (91.50 விழுக் காடு) பேரும் தேர்ச்சி பெற்ற னர். மொத்தத்தில் 5 ஆயிரத்து 124 மாணவர்கள் (86.86 விழுக்காடு) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த  ஆண்டு 86.47 விழுக்காடாக இருந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 0.39 விழுக்காடு அதிகரித்து இந்த ஆண்டு 86.86 விழுக் காடாக உயர்ந்துள்ளது. எம்.எச். சாலை சென்னை  பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி 600க்கு 592 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி - 589, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி -587, மடு வின்கரை சென்னை மேல் நிலைப் பள்ளி மாணக்கர் - 583, மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி - 582 என மதிப்பெண்களை பெற்று அடுத்தடுத்த இட ங்களை பெற்றனர். முழு மதிப்பெண் வேதியியல், தாவரவி யல், வரலாறு பாடப் பிரிவு களில் தலா ஒருவரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், புவியியல் பாடப் பிரிவுகளில் தலா 2  பேரும், பொருளியல் பாடப்பிரிவில் 7 பேரும், வணிகவியல் பாடப் பிரி வில் 20பேரும், கணக்கு  பதிவியல் பாடப்பிரிவில் 25பேரும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 பேரும், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 9 பேரும் என  71 பேர் 100/100 மதிப்பெண் களை பெற்றுள்ளனர். 42 மாணவர்கள் பல்வேறு  பாடப்பிரிவில் 99 மதிப்பெண் களை பெற்றுள்ளனர். தேர்வுகளில் மொத்த  மதிப்பெண்கள் பெறுவ திலும் சென்னை பள்ளிகள் முன்னேறியுள்ளன. (கடந்தாண்டு எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்) 90  விழுக்காட்டிற்கு மேல் 52 (47) பேரும், 80 விழுக் காட்டிற்கு மேல் 254 (164) பேரும், 70 விழுக்காட்டிற்கு மேல் 456 (323) பேரும் மதிப் பெண்களை பெற்றுள்னர். பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சுப்பராயன் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.29 விழுக்காடு, நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளி 97.89  விழுக்காடு, புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப் பள்ளி 97.44 விழுக்காடு, திருவான்மியூர் சென்னை மேல்நிலைப் பள்ளி 95.55 விழுக்காடு தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் 90.66 விழுக்காடு தேர்ச்சி

விழுப்புரம், மே 8- விழுப்புரம் மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களில் 90.66 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்களன்று (மே 8) வெளியிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 6 அரசுப் பள்ளிகள் உட்பட 45 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் பழனி பாராட்டு தெரிவித்துள்ளார்.  மேலும், தேர்வில் தோல்வியடைந்தவர்கள், ஜூன் 19அன்று நடைபெறும் உடனடி தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெற்று நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெறலாம். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவதோடு, அன்பு காட்டி பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கடலூர், மே 8- கடலூர் மாவட்டம், வேப்பூர் திருபாக்கம் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. அதில் கிடைத்த  20 ஆயிரம் ரூபாயை கோவில் உண்டியலில் போட்டு வைத்தனர்.  இந்நிலையில், வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். திங்கட்கிழமை காலை கோவிலை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்த சுமார் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளையடிக் கப்பட்டதும், அம்மன் கழுத்திலிருந்த 3 கிராம் தங்க நகை கொள்ளை யடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. காவல் துறையினர் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியானவருக்கு நட்டஈடு வழங்க கோரிக்கை

கடலூர், மே 8- மதுபானக் கடையில் மின்சாரம் தாக்கி பலியான வருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலி யுறுத்தினர். கடலூர் மாவட்டம், புவன கிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மது பான கடை உள்ளது. ஞாயிற்றுக்  கிழமை இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த ராஜாராமன் (45) மது பாட்டில் வாங்க சென்றுள்ளார். அப்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அவர் அந்த கடை யின் ஓரமாக ஒதுங்கி நின்ற கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்டுள்ளார். அப்போது எதிர்பராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் அந்த மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டு, ராஜராமன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அந்த கிராம மக்கள் புவனகிரி காவல் துறையினரிடம் வலியுறுத்தினர்.

ரவுடிகளை கட்டுக்குள் வைத்த  காவல் ஆணையர்

சென்னை,மே 8- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவர் பொறுப்பேற்று  திங்களுடன்  2 ஆண்டுகள் நிறைவடைகிறது. சங்கர்ஜிவால் பதவி ஏற்றதிலிருந்து  தொடர்ந்து ரவுடித்தனம் செய்பவர்களை  அடையாளம் கண்டு வேட்டையாடிவருகிறார். மேலும் சைபர் குற்றங்களை கண்டுபிடித்து தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். இதற்காக காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தவும் முன்னுரிமை அளிக்கிறார். குற்றச்செயல்களில் ஈடு படும் குற்றவாளிகள் மீது உரிய காலத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து உடனடியாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.  போக்குவரத்து விதி களை மீறுபவர்களுக்கும் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது. போக்கு வரத்தை மீறி வாகனம் ஓட்டினால் அதி கரிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்க உத்தர விட்டுள்ளார். போலீ சார் மீது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் உரிய விசா ரணை நடத்தி அவர்கள் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டால் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப் படுகிறது.