புதுச்சேரி, டிச.20- இபிஎஃப் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ. 9000 பஞ்சபடியுடன் வழங்க வேண்டும், இ.பி.எஃப்- 95 ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் பென்ஷனர்கள் நல சங்கத்தினர் மறியல் செய்ய புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் ஒன்று திரண்டனர். அப்போது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில செயலாளர் சீனிவாசன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் கொளஞ்சியப்பன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் குணசேகரன், நடராஜன், ராமலிங்கம்,செல்வராசு, செங்குளத்தான், இளங்கோ, ஆவணியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.