districts

img

திருவள்ளூர்: 9 மையங்களில் மறியல்

திருவள்ளூர், செப். 7- திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் நடைபெற்ற  மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கைதாகினர். திருவள்ளூர் தபால் நிலையத்தை  கட்சி யின் வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் முற்றுகையிட்டனர். இதில் மாநிலக் குழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.மோகனா உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர். பொன்னேரி ஐஓபி முன்பு நடைபெற்ற மறியலுக்கு கட்சியின் பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. விஜயன் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டனர். மீஞ்சூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஒன்றியச் செயலாளர் இ.ஜெயவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.சந்தானம் உள்ளிட்ட பலர் கைதா கினர். கும்மிடிப்பூண்டி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைதாகினார். திருத்தணியில் வட்டச் செயலாளர் வி.அந்தோணி தலைமையில் நடைபெற்ற மறியலில் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சோழவரம் ஒன்றிய செயலாளர் ஜி.வி.எல்லையன் தலைமையில் செங்குன்றம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.நடேசன், அ.து.கோதண்டன், சித்ரா உள்ளிட்டோர் கைதாகினர். பெரியபாளையம் ஐஒபி வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, கங்காதரன், கன்னியப்பன், பத்மா, உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். ஆர்.கே.பேட்டை இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு வட்டச் செயலாளர் ஏ.சிவபிரசாத் தலைமையில்  கைதாகினர். இதில்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூந்தமல்லி ஒன்றியம் திருநின்றவூரில் பாரத் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஒன்றிய செயலாளர் ஜே.ராபர்ட்எபிநேசர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத் உள்ளிட்ட பலர் கைதாகினர்.