செங்கல்பட்டு, செப்.7- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு இந்தியன் வங்கி எதிரில் வட்ட செய லாளர் கே.வேலன் தலை மையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி கலந்து கொண்டனர். திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் வட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செய லாளர் ப.சு.பாரதி அண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சித்தாமூர் கூட்டு சாலையில் செய்யூர் வட்ட செயலாளர் எஸ்.ரவி தலை மையில் நடைபெற்ற மறி யலில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் இ.சங்கர், க.புரு ஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.வாசு தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிங்கப்பெருமாள் கோவில் இந்தியன் வங்கி அருகில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சேஷாத்திரி, வி.தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.