districts

img

பிச்சாவரம் சுரபுன்னை காடுகள் இங்கிலாந்து அமைச்சர் பார்வையிட்டார்

சிதம்பரம், ஜூலை 30-

    காலநிலை மாற்றம் குறித்து சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுரபுன்னை காடுகளை இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா அன்னே கபே  பார்வையிட்டார்.

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுர புன்னை (அலையாத்தி) காடுகள் அதிக அளவு உள்ளது. இது வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரு கிறது.

     இந்த நிலையில், கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பார்வையிட இங்கிலாந்து அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரசா அன்னே கபே, பிச்சாவம் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்து மையத்தை பார்வையிட்டார்.  

     அவர் பின்னர் பட கில் சென்று  சுரபுன்னை அலையாத்தி காடு கள் நடுவே காலநிலை மாற்றம் குறித்து பல்  வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.

     மேலும், அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்களிடம் அலை யாத்திக் காடுகள் எப்படி பராமரிக்கப்பட்டு வருகிறது? அதனால் வாழ்வாதாரம் எப்படி உள்ளது? என கேட்டறிந்தார்.

    முன்னதாக, மேள தாளங்கள் முழங்க, மாலை அணிவித்தும், கிரீடம் சூடியும் கிள்ளை பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் இங்கிலாந்து அமைச்ச ருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

     அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாகு, மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்பு ராஜ், முதன்மை தலைமை வன அலுவலர் தீபக் ஸ்ரீவஸ்தவா,மாவட்ட  வன அலுவலர் குருசாமி, கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.