districts

மாநில அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

விழுப்புரம், மார்ச் 26- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஓன்றியத்திற்குட் பட்ட வைடப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.  இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு நடை முறைப்படுத்திய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.  முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் கொரோனா சிகிச்சை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் முதலமைச்சரின் ஒரு லட்சம் விவசாயிக ளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள், கோவில்களில் நிலை யான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சா ரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டங்களும் இடம்பிடித்திருந்தன. கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வை யிட்டனர்.