புதுச்சேரி,ஜன.20- கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்ப ங்களுக்கு உதவிட புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. கொரோனா நோய் தொற்று பெரும்காலத்தில் புதுச்சேரி பத்திரிகை யாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் வகையில், தி நியூ இந்தி யன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதுச்சேரி ஒளிப்பதிவாளராக பணி யாற்றும் பட்டாபிராமன் தனது புகைப்படங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளார். திறப்பு விழா புதுச்சேரி செயின்ட்திரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி கலைக்கூ டத்தில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார். இதில் சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோரும் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில் விற்பனை யாகும் புகைப்படங்களில் இருந்து கிடைக்கும் தொகை முழுவதும் இறந்த பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று ஒளிபதிவாளர் பட்டாபிராமன் தெரிவித்தார்.