விழுப்புரம்,அக்.16- கழிவறை வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். விழுப்புரம் மாவட்ட, ஆட்சியர் அலுவல கத்தில் திங்கள்கிழமை (அக்.16) நடை பெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பழவந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கழிவறை கேட்டு ஆட்சியரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் பள்ளியில் தினந்தோறும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் பாடவேளையில் ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து மிருகங்களும் வந்து செல்கின்றன, இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால், பொதுவெளியில் அல்லது வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது, அதனால் உடனடியாக சுற்றுச்சுவர் மற்றும் கழிவறை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக தெரிவித்தனர்.