கடலூர்,டிச.18- குடிமனை பட்டா கேட்டு கடலூர் ஆட்சியர் அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. சிதம்பரம் வட்டம், கொடிப்பள்ளம் கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் கான்சாகிப் வாய்க்கால் கரையோரம் வசித்து வருகின்றனர். மழை, வெள்ளம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு வசிக்கும் ஏழை மக்கள் நிரந்தரமாக வீடுகள் கட்டுவதற்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒன்றிய செயலாளர் ஜி.ஆழ்வார், மாவட்டக் குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், கிளைச் செயலாளர் கள் பரஞ்சோதி, பிரபா காந்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுதாகர், திருஞானம், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் சிவலோகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.